தனிமை
கரைந்து விழுமந்த கார் கொண்ட மேகம்
கண்ணீரைத் துடைக்காமல் போகிறது பாராய்
பாரா முகத்தினது பனி கொண்ட காற்று
பக்கத்தில் உரசாமல் போகிறது கேளாய்
கேளா விழியுடைய தேன் கொண்ட நீரோ
கேட்காமல் செல்கிறது நெஞ்சோரச் சுவையாய்
சுவைத்துப் பார்க்காத கனி கொண்ட நிலமோ
சூழ்நிலை மாறாமல் சுற்றுது பல நாளாய்
நாள் பகல் பாராமல் எரியும் மனநெருப்போ
நானிட்ட கண்ணீரில் நனைகிறது கரைந்து.