வெயின்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு - நாலடியார் 171

நேரிசை வெண்பா

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு. 171

- நல்லினம் சேர்தல், நாலடியார்

பொருளுரை:

அறிய வேண்டுவன அறியாத சிறுபருவத்தில் அடங்கியொழுகாத தீயோருடன் சேர்ந்து முறையல்லாதவற்றைச் செய்தொழுகிய தீயகுணங்களும் வெயில் கடுகுதலால் புல் பனியின் பற்றுதல் விட்டாற்போல நன்னெறி தெரிந்து ஒழுகும் உயர்ந்த பெரியோர் சார்பைச் சார்ந்து பழகுதலால் கெடும்.

கருத்து:

தீய குணங்கள் நீங்கும் பொருட்டு நல்லாரினத்திற் சார்ந்து பழகுதல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Mar-22, 6:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே