காதல் எனப்படுவது யாதெனில்

காதல் எனப்படுவது யாதெனில் ...

அவன்விழியில் தோன்றும் அவள்விழி கூறும் சேதி அறிந்து

அவள்மனதிற்கு அமுது படைக்கும் ஆணின் அன்பே காதல் ஆகும்

காதல் எனப்படுவது யாதெனில் ...

அவன்செயல் அறிந்து முன்தேவை முதலில் உணர்ந்து முன்தருபவள்

ஆக... ஆண்மனதை ஆட்சி செய்யும்
பெண்ணின் பேரன்பே காதல் ஆகும்

காதல் எனப்படுவது யாதெனில்

கருத்தில் ஒன்றாக...
கவிதையில் பலவாக ...

வண்ணத்தில் வேறாக ....இருப்பினும்
எண்ணத்தில் வேராக...

உள்ளத்தில் கள்ளமற்று ஒருங்கிணைந்து ஒன்றல்

நற்காதல் என நலம்பயக்கும் .

எழுதியவர் : பாளை பாண்டி, (4-Mar-22, 5:58 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 198

மேலே