பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்தில் பட்ட மறு – அறநெறிச்சாரம் 74

இன்னிசை வெண்பா

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகந் தாக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு 74

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஒழுக்க நூல்களை உணர்ந்து அவைகளுக்கு உடன்பாடு ஆகாதனவற்றைச் செய்யாது விடுத்து, ஞான நூல்களை எல்லையில்லாமல் உலகோர் பொருட்டுச் செய்து இறைவனையடைய விரும்பி வாழ்கின்றவர், பிறர் பழித்தற்கு ஏதுவான செயல்களைச் செய்தல் சந்திரனிடத்துத் தோன்றும் களங்கமே யாகும்.

குறிப்பு:

வேற்றுமை - மதவேறுபாடு முதலியன எனலுமாம். பதிப்பட்டு – மன அமைதியுற்று எனலுமாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-22, 7:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே