தன்னை இறைவனாச் செய்வானுஞ் சிறுவனாச் செய்வானுந் தானேதான் – அறநெறிச்சாரம் 77

நேரிசை வெண்பா

தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானுந் தானெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானுந் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானுந் தான் 77

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஒருவன் நன்னெறியில் நிற்பானாயின் அவனை விட வேறான தெய்வம் ஒன்று இல்லை; அவன் ஒருவிதத்திலும் நன்னெறியில் நில்லானாயின், அவனிற் தாழ்ந்தது வேறொன்றில்லை;

தன்னை மற்றவர்களுக்குத் தலைவனாகச் செய்துகொள்பவனும் அவனே, தன்னை மற்றவர்கட்கும் தாழ்ந்தோனாகச் செய்து கொள்பவனும் அவ்னே ஆவான்.

குறிப்பு:

“நெறிநில்லானேல், அவனிற் றாழ்ந்தது வேறொன்றில்லை” என விரித்து முடித்தது இசையெச்சம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-22, 12:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே