எள்ளுநெய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

புத்திநய னக்குளிர்ச்சி பூரிப்பு மெய்ப்புளகஞ்
சத்துவங் காந்தி தனியிளமை - மெத்தயுண்டாங்
கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்
புண்ணோய்போம் என்னெய்யாற் போற்று

- பதார்த்த குண சிந்தாமணி

அறிவு தெளிவு, விழிக்குளிர்ச்சி, மனமகிழ்ச்சி, உடல்பலம், அழகு இவை எள்நெய்யால் உண்டாகும்; கண்நோய், செவிநோய், கபால அழல் நோய், காசநோய் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-22, 6:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கவிதைகள்

மேலே