இனியவளே தந்துவிடு எனையே என்னிடம்

அன்பு பெண்புறாவே கண்ணில் காந்தம் வைத்து கவர்ந்தது போதும்

தந்துவிடு எனையே என்னிடம் யாருக்கும் தெரியாமலே

மண்ணில் உள்ள ஆயிரம் கண்களில் நின்கண் நித்தமும் நான்மறவேன்

ஏனெனில் ...

கோடைவெயில் சூட்டை சீவிய இளம்பனங்காய் கண்கள் தணிக்கும்

அதுபோல்...

உன்தவிப்பில் தகிக்கும் என்நெஞ்சு சூடும் தணிந்திடும் உன்கண்ணால்

காதல்உலகம் 🌏 சுழலுதடி உன்கண்ணில் ❤️

இடம்மாறி துடிக்குதடி இதயம்....

இனியவளே தந்துவிடு எனையே என்னிடம் ...

எழுதியவர் : பாளை பாண்டி (22-Mar-22, 6:39 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 403

மேலே