நீயும் நானும்
நீ
தலை கோதி உறங்க
வைக்க நீ வேண்டும் ..
என் தாயின் மடியில்
கண்ட கனவுகளை மீண்டும்
காட்டிட நீ வேண்டும் ..
வெளி வேதனைகளில்
நான் விழும் வேலைகளில்
விழி ஒளியாய் நீ வேண்டும்..
தந்தையின் விரலை
எட்டி பிடிக்கும் கைக்குழந்தை போல்
உன் விரல்கள் பற்றி
நான் இருக்க வேண்டும்...
நான்
தொலைந்து போன
உன் கனவுகளை
நான் சுமப்பேன்
உன் தந்தை
உன்னை தோளில்
சுமந்தது போல நான் ...
உன் இலக்குகளை அடைய
வழிவகைகளை செய்வேன்..
வாசலும் திறப்பேன்
வாயில் காவலனாக...
காலமும்
கூட்டுக்குள் அடைபடும்
பறவையாக ஆக்கமாட்டேன் ...
வானில்லை என்று ஏங்காதே
நானே வானமாக
மாறி வருவேன் ....