ஈசனே துணை..!!

என்னப்பன் ஈசனை காண
எங்கிருந்தாலும் எவ்வளவு
தூரம் என்றாலும் செல்ல
நான் தயார்..!!

ஐயனே உலகில் ஆயிரம்
தெய்வங்கள் இருந்தும்
என் மனம் உன்னை தவிர
வேறு ஒருவரை நாடா மறுக்கிறது..!!

ஆலகால விஷத்தையும்
அமிர்தம் என அருந்தியவன் நீ
எந்த தெய்வங்களிலும் இல்லாத
ஒன்று பிச்சை ஓட்டை உந்தன்
கைகளில் ஏந்திய நிற்பவன் நீ..!!

அகிலத்தையும் அரை வினாடியில்
அழித்து செல்லும் ஆற்றல் மிகுந்த நீ
ஈசனே துணை
ஓம் நமச்சிவாய..!!

எழுதியவர் : (30-Mar-22, 7:54 pm)
பார்வை : 120

மேலே