மயில்வேலுடையோன் எனும் மனமகிழ்விப்போன்

மயில் உடையோன் அவன் மழலைநகை(புன்) கொண்ட
தூயோன்அவன்


பால் உண்ணும் பால்ய முகத்தவன்
அவன்
தோல் சுருங்கா நெடியோன் அவன்


கொஞ்சு தமிழ்பேசும் பிஞ்சு
பாலகன் அவன்
நஞ்சு உண்ட அரனின் குருவாய்


அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பன்அவன்
அன்னைத்தமிழ் ஆராதிக்கும்
அமுதன் அவன்

வள்ளியை மணந்த வேடன் அவன்
தெய்வானையை திருமணம் புரிந்த
தேவன் அவன்

அறம் காக்க வேல் ஏந்தியவன் அவன்
அகிலம் காக்க அசுர வேர்
அழித்தவன் அவன்


வேலும் மயிலும் உடையோன் அவன்
வினையினை வேரறுப்பவன் அவன்

தீரா பிணியை தீர்ப்பவன் அவன்
திக்கெட்டும் காப்பவன் அவன்

சேவற்கொடியோன் அவன்
செருக்கில்லா தலையோன் அவன்


வேலும்மயிலும் கொண்ட
மால்மருகன் அவன்


மனமகிழ்வு பலதரும் மனமகிழ்விப்போன் அவன்

அவனே எந்தன் முருகன் கந்தன் எனும் சரவணபவ மந்திரன் அவன்

இணையடி நிழல் போற்றி போற்றி
திருவடி சரணம் போற்றி போற்றி

ஓங்கார மறைபொருள் ஒப்பில்லா
கருப்பொருள் போற்றி போற்றி

எழுதியவர் : பாளை பாண்டி (9-Apr-22, 9:36 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 129

மேலே