அரோகிணிக் கடுக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(’ன்’ ‘ங்’ மெல்லின எதுகை)
ஓதும் அரோகிணிக்காய் ஒன்றுண்டா னாற்சந்நி
பாதமொடு சீதம் பறக்குங்காண் - மீதுகுறி
நான்குவரி யாய்த்தோற்றும் நங்காய் அதன்தேசம்
ஆங்குகன்னி யாகுமரி யாம்
- பதார்த்த குண சிந்தாமணி
கன்னியாகுமரியில் கிடைக்கும் இக்கடுக்காயால் சன்னியும், சீதமும் நீங்கும்.