WHY THIS SILENCE DEAR BLUE SKY
வானமே மௌனம் ஏனோ
நிலவு தேயும் சோகத்தினாலோ
வான் முகிலே பொழியாதது
ஏனோ
பயிர் நிலங்கள் பாழாகி
கட்டடங்கள் ஆனதாலோ
வான் தென்றலே
வீசாதது ஏனோ
சாளரங்களை மூடி மனிதர்
ஏசி யில் திளைப்பதாலோ
தேன் நிலவே தேனும் பாலும்
சிந்தாது ஏனோ
காதலர்கள் மணம் முடித்து
ஹனிமூன் வாராததாலோ
பொன்னெழில் புன்னகை
புரியாதது ஏனோ
நான் வந்து கவிதை
தாராததாலோ ???