பீர்க்கங்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தின்றவுடன் பீர்க்கங்காய் சீதமுறுங் காண்பித்தம்
ஒன்றுமூன் றாக உயருமே - மன்றலணிக்
காரளகக் கச்சுமுலைக் காரிகையே! வாதகபம்
நேரளவைத் தாண்டும் நினை
- பதார்த்த குண சிந்தாமணி
இது நீர்ப்பிடிப்பு, பித்தம் இவற்றை உண்டாக்கும்; பித்தம் மூன்று பங்காகும்; வாத கபங்கள் தத்தம் நிலையினின்று மாறும்