பீர்க்கங்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தின்றவுடன் பீர்க்கங்காய் சீதமுறுங் காண்பித்தம்
ஒன்றுமூன் றாக உயருமே - மன்றலணிக்
காரளகக் கச்சுமுலைக் காரிகையே! வாதகபம்
நேரளவைத் தாண்டும் நினை

- பதார்த்த குண சிந்தாமணி

இது நீர்ப்பிடிப்பு, பித்தம் இவற்றை உண்டாக்கும்; பித்தம் மூன்று பங்காகும்; வாத கபங்கள் தத்தம் நிலையினின்று மாறும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-22, 9:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே