பெருமருந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

திரிதோஷம் வெப்பு சிரங்குசொறி நஞ்சோ
டரிதேமல் வன்புடையு மண்டா - தொருவான்
அருமருந்தை யொத்த வணங்கே யுலகிற்
பெருமருந்தை நீயெடுத்த பின்பு

(அல்லது)

திரிதோடம் வெப்பு சிரங்குசொறி நஞ்சோ(டு)
அரிதேமல் வன்புடையும் அண்டா(து) - ஒருவான்
அருமருந்தை யொத்த அணங்கே உலகிற்
பெருமருந்தை நீயெடுத்த பின்பு.

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் முத்தோடம், வெப்பு, சிரங்கு, நஞ்சு, தினவு, தேமல், மேகப்படை இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Apr-22, 9:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே