விழிநீருக்கு காரணம் இல்லாமல் இரு 555

***விழிநீருக்கு காரணம் இல்லாமல் இரு 555 ***


அன்னை/தந்தை ...


தினம் பட்னி கிடந்து
பள்ளியில் சேர்த்தவர்கள்...

கல்,மண் சுமந்து
கல்லூரியில் சேர்த்தவர்கள்...

வெயிலில் காய்ந்து
உனக்காக வேலை பார்ப்பவர்கள்...

புழுதி காற்று அவர்கள்
மேனியில் பட...

உன்னை முந்தானையை
கொண்டு மூடி மறைத்தவர்கள்...

கருவில்
இருக்கும் உனக்காக...

கண்மூடாமல்
இரவெல்லாம் விழித்திருந்தவர்கள்...

அதிதூக்கத்தில் புரண்டு படுத்தாள்
உனக்கு நோகுமென்று...

இரவு சூரியனாய்
வி
ழித்திருந்தவர்கள்...

சுயநலம் இல்லாத இதயம்,
வெறுப்பு காட்டாத முகம்...

ஒவ்வொரு நாளும் உன்னை
கண்டு பேரானந்தம் கொள்பவர்கள்...

தாய் தந்தை பாசம் பூமிக்குள்
ஓடிக்கொண்டு இருக்கும் நீரூற்று போல...

என்றும்
குறையாத பாசம்...

நம்
கனவுகளை சொன்னால்...

தீபமாக எரிந்து நமக்கு
வெளிச்சம் கொடுப்பவர்கள்...

விரல்பிடித்து நடக்க
கற்று கொடுத்தவர்கள்...

முதுமை காலத்தில் தனிமையில்
நடக்க விட்டுவிடாதே...

முதுமை காலத்தில் அவர்களின்
விழிநீரை துடைக்க வேண்டாம்...

அவர்களின் விழிநீருக்கு காரணம்
இல்லாமல் இருந்தால் போதும்...

சுயநலமில்லா அன்பை
உணர்வாய் நீயும் ஒருநாள்...

நீ தாய் தந்தை
ஆகும் போது.....


***முதல்பூ .பெ .மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (21-Apr-22, 4:38 pm)
பார்வை : 458

மேலே