புத்தாண்டு கொண்டாட்டம்
சக்கரை வாசனார்
நேரிசை வெண்பா
புத்தாண்டு காலைக் குளியல் புதியவாடை
அத்தனையொக் கல்வாழ்த்து வாங்கிப்பின் -- பித்தன்
அருளாசி கோயில் கருவறையில் வேண்டி
பெறுந்தமிழர் காணோமே யின்று
ஆசிரியப்பா
பறங்கிப் புத்தாண்டு நடுநிசி நிலவொளியில்
உறங்கா கூடியாடி இளவட்டம் நடனமாடி
நடுநிசி விளக்கில் நச்செனக் வெடித்து
கேக்கை வாயில் மற்றவர்க்கு புகட்டுவர்
பெரிசுகளோ குடும்பத்தோடு திருப்பதி
அல்லது சனிக்கோயில் நடைதிறக்க
நள்ளிரவு தரிசித்து பெருமை கொள்வதேனோ
பிறந்த நாளிலும் மிதேநட வடிக்கை
பின்பற்றும் தமிழர் கெட்டழிய
துணைபோன விரோதி யாராம் பாரே
.......