வாய்மொழி பேசா அபலை

புன்னகையை சிந்தும்
அவள் முகம் இன்று
ஏனோ சோகத்தின்
உருவாய் இருக்கிறது...

காரணத்தை அறிந்திட
அவள் முகத்தினை
கூர்ந்து பார்கிறேன் நான்...
அகத்தின் சோகத்தினை
அறிந்திட முடியவில்லை...

காரணம் கேட்டேன்
வாய் மொழி
தெரிந்திருந்திருந்தால்
சொல்லிச் சென்றிருப்பாள் போலும்
சாந்த முகத்துடன்
எனைத் திரும்பிப்
பார்துவிட்டுச் செல்கிறாள்
வாய் மொழி பேசா அபலைப் பெண்ணவள்...

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (5-May-22, 2:10 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 48

மேலே