உன் அளவில்லாத அன்பு
உன் அளவில்லாத அன்பு
தூயவளே நீ வழங்கும் உண்மை அன்பை
துயிலும் வேளையிலும் உணர்கிறேன்
இப்பந்தம் எத்தனை ஜென்மம் கடந்து
இந்த ஜென்மத்தில் தொடர்கிறது என்று
மனதில் நினைத்துப் பார்த்து வியக்கிறேன்
கண்முன் இருக்கையில் நீ அமரும் நேரம்
தனிமையை மறந்து இனிமையை உணர
உள்ளத்தில் எப்பொழுதும் இன்பம் நிறைந்து
உரிமை கொண்டு உன்னை கடிந்து பேசிட
உன் மனம் புண்பட்டு என்னைக் கோபிக்க
கோபத்திலும் உன் அன்பு வெளிப்படுகிறது
முற்றிய கோபத்தில் தீயாக நானும் எரிந்திட
எல்லாம் முடிந்ததோ என உள்மனம் தவிக்க
என்றும் போல் சகஜமாய் நீ என்னை அழைக்க
இனியவளின் அன்பை மீண்டும் உணர மனமும்
அமைதியாகி ஆசுவாசத்துடன் இனிக்கிறது
உன் அன்பை எண்ணி பூரிக்கிறது என்றும் போல்