கண்ணனின் ராதை
கரும்பில் கனிந்திருக்கும் இனிமைப்போல்
மலர்களில் ததும்பும் மதுபோல் இன்னும்
பாலில் கலந்த கற்கண்டின் இனிப்புபோல்
கண்ணனின் மனதில் இன்பப்பெருக்காய்
கண்ணனின் மாய சக்தியாய் இருக்கும்
கண்ணனின் காதலி அவனில்பாதி ராதை