அன்பை விதை மனிதப் பண்பை விதை

அன்பை விதை; மனிதப் பண்பை விதை

அன்பு அன்பு; அது அன்பு பூ;
அன்பு அது மனிதப் பண்பு;
அரும்பாய் அரும்புவது அன்பு;
அன்னையின் பாசத்தில் படருவது அன்பு;
அடுத்தவர்கள் மீது பயபக்தியும்
பரிவும் காட்டுவது அன்பு;
வெல்ல முடியாத அன்பு;
வெளிச்சத்தில் தெரியாது அன்பு;
வெறுக்க முடியாதது அன்பு;
விற்கமுடியாதது அன்பு;
விலை மதிப்பற்றது அன்பு;
சொல்ல வந்த அன்பு; செல்ல முடியாது;
அன்பு அது அன்பு
அதை நீ நம்பு
அன்பு உங்களை அழகாக்கும்;
அன்பு உங்களை அழவும் வைக்கும்;
அளவில்லா மகிழ்ச்சியும் இன்பத்தையும் தரும்;
எனவே, அன்பை விதை; மனிதப் பண்பை விதை
சுற்றிவரும் அன்பு; சுமையாகாது;
சுத்தமாய் வராத அன்பு, சுவைக்காது;
சுற்றத்தோடு வரும் அன்பு, சுமக்காது இருக்காது;
சுகம் காண வந்த அன்பு, சொந்தம் ஆகாது;
சோதனை செய்யும் அன்பு, சோகத்தை மறக்காது;
ஏக்கத்தில் வந்த அன்பு;
எதிர்த்தாலும் எட்டிபார்க்காது இருக்காது.
எடுபடாத அன்பு சுட்டு எரிக்காமல் விடாது;
எட்டிபார்க்காத அன்பு, ஒட்டி உறவாடாது;
எட்டாத அன்பு, சுடாமல் விடாது;
அத்து மீறிய அன்பு,உன்னை அழிக்காது விடாது;
அள்ள முடியாத அன்பு, கொள்ள முடியாது;
பிடிக்காத அன்பு, பாசத்தை படிக்காது ;
பிடிவாதம் பிடிக்கும் அன்பு
பொய்யும் புரட்டும் சொல்லாமல் விடாது;

படராத அன்பு, தொடராது;
நிலைக்காத அன்பு, நினைக்காது,
சுரக்காத அன்பு, சுவைக்தாது;
சுமக்காத அன்பில், சுகம் இருக்காது;
தொலைவில் இருந்தும், நேசிக்காத அன்பு
தொல்லை கொடுக்காமல் இருக்காது;

விலகினாலும் அன்பு விலகாது;
உலகைவிட்டு விலகிய பின்பும்;
அன்பின் நினைவுகள் மடியாது;

அன்பு கனியென்றால்;
இன்பம் அதன் சுவையாகும்;


நிலைக்காத அன்பில் பாசம் நிற்காது;
நினைக்காத அன்பில் பிரியம் இருக்காது;
பிரியாத அன்பு புதையாது;
புரியாத அன்பு பூக்காது;
தேடும் அன்பில் வேசம் இருக்காது;
ஓடும் அன்பில் உண்மை இருக்காது;

துக்கம் தாங்கிய மனதுக்கு தூக்கம் இருக்காது;
தயக்கம் இல்லாத மனதில் துக்கம் இருக்காது;

அன்புக்குக் நிதர்சனமானது எதுவும் இல்லை;
அன்பால் கட்டுப்படாத ஜீவன் இல்லை
பசப்பில் பாசம் ஒட்டுவதில்லை;
அன்பில் விழுந்தவன் உண்டு;
அன்பால் விழுந்தவன் யாரும் இல்லை;
அன்பு மலரில் பாச மனம் (மணம்) இல்லை யென்றால், அன்பும் கரிக்கும்;
கண்ணீரை விதைக்கும்;

உண்மையான அன்பு உயிரைத்தரும்;
ஒட்டாத அன்பு ஓடத் துடிக்கும்;


பொய்க்காதது அன்பு; போக தவிப்பது பாசம்;
நிலைக்காத அன்பில், நிற்காதது பாசம்;
நினைக்காத நேசத்தில், நீடிக்கும் மோசம்;
நனைக்காத அன்பு நிலைக்காது;
அன்பு நிற்காத ஊற்றில்; ஆசை சுரந்தால் நாசம்;
அடங்க வைப்பது அன்பு; அடங்கிப்போகாதது சீற்றம்;

அழிக்கத்துடிப்பது கோபம்;
அணைக்கத்துடிப்பது பாசம்;
சிறைவைப்பது அன்பு; சிந்திக்க வைப்பது நட்பு;
சிதைக்க நினைப்பது துரோகம்;


மன வீக்கம் மகிழ்ச்சி தராது;
முகமலர்ச்சி பாசத்தால் வரும்;
மனமகிழ்ச்சி அன்பால் வரும்;
உண்மையான மகிழ்ச்சி; உள்ளத்திலிருந்து வரும்;
உள்ளன்பு தூய்மைதான்;
உண்மை அன்பு ஊமையானது;
உருகியே நன்மையே பயக்கும்;

அன்பு அன்பு;கொஞ்சும் அன்பு; குறையாத அன்பு;
கெஞ்சும் அன்பு; மிஞ்சும் அன்பு;
வீம்பு பிடுக்கும் அன்பு;விழுந்தே தவிக்கும் அன்பு;
விலை மதிப்பற்ற அன்பு;

கட்டி அணைக்கும் நேசம்,
காய்ந்து விட்டால் வேசம்;
கலைந்து விட்டால் நாசம்;

அன்பால் முயன்றிடு;
அன்புடன் பழகிடு; அசிங்கத்தை அழித்திடு;

அழுதால் ஆறுதல் சொல்லுவது அன்பு;
அணைத்தால் பாசத்தை பொழியும் அன்பு;
அடித்தாலும் கதறும் அன்பு;

தோற்றாலும் தொற்றியே தொடரும் அன்பு ;
ஊற்றாய் ஊரும் அன்பு;
உள்ளத்தை நெகிழ வைக்கும் தாயன்பு;

அன்பு, அன்பு, அன்பு, அது மனித பண்பு;
சிசுவின் அன்பு; சிறுவர்கள் காட்டும் அன்பு;
சகோதர சகோதரி அன்பு;
உருவம் இல்லாதது அன்பு;
உறவாய் மாறிய அன்பு;
உன்னையும் என்னையும் இணைப்பது அன்பு;
உதட்டலவில் பேசுபவனிடம் ஒட்டாத அன்பு;
நட்பாய் மாறிய அன்பு; காதலாய் கனிந்த அன்பு;
கட்டியவளிடம் சொட்டிய அன்பு;
சொந்த பந்தத்தில் ஊரிய அன்பு;
சொல்லாமலே வரும், இந்த அன்பு

மனதில் பூத்த அன்பு மயக்காமல் விடாது;
மண்ணில் பூத்த அன்பு; மணக்காமல் விடாது;
மனித இனம், மரம் செடி கொடி, விலங்கினம்
பறவையென்று, இனம் காணாது, படர்ந்த
ஜீவ நதியே அன்பு;
பேரன்பு பெயர் தெரியாத அன்பு;
பேசத் தெரியாத அன்பு; பாசை இல்லாத அன்பு;
பாசம் வழியும் அன்பு;

போலி அன்பு போதை தரும்;
போலி அன்பு கேலி செய்யும்;
போலி அன்பு பொய்திடும்;
போலி அன்பு பொசுக்கி விடும்; அன்பை இழந்தோர்; அணாதைகள் தான்;
அன்பை இழந்தவர்கள்; மனித பண்பை இழந்தோர் ஆவர்;

இல்லை என்றே சொல்லாத அன்பு;
எடுக்க எடுக்க; குறையாத அன்பு;
குறைகாணாத அன்பு; குன்றாய் உயர்ந்த அன்பு;
குதூகலம் நிறைந்த அன்பு;

அன்பின் அன்பு; அறிய அன்பு,
அன்னையின் அன்பு;
அளவிட முடியாதது, ஆழமானது; அப்பழுக்கற்றது;

அன்பை நேசி; அன்பால் நேசி;
அன்புடன்நேசி; அன்புக்காக நேசி ;
மண், பூமி, மரம், செடி, கொடி, மனிதன் என்று அனைத்து ஜீவராசிகளையும் நேசி;
அன்புடன் பேசுங்கள்; அன்பாய் பேசுங்கள்
அன்பனாய் பேசுங்கள்;
அன்பை விதை; அன்பால் விதை;
அன்பான நேயத்துடன்; அன்பு விளக்கை ஏற்றி
அன்புச்சுடரை புவி எங்கும் பரப்பு;
அன்பு நிறம்பட்டும் உள்ளத்திலும், இல்லத்திலும், உலத்திலும்

எழுதியவர் : அ முத்துவேழப்பன் (17-May-22, 8:20 am)
பார்வை : 603

மேலே