அவமானகள் நிறைந்த

வறுமையில் கடைக்காரனிடம்
வெட்கம் விற்று வாங்கிவந்தேன்
மளிகை பொருட்களை...
அவமானகள் நிறைந்ததாய்
இருந்த
அவன் அனுசரிப்பு
முன் பாக்கியை நினைவூட்டியது
கலக்கம் நிறைந்த கண்களோடு
வீதி இருட்டை முடித்து
அரை வெளிச்ச வீட்டுக்குள்
மெல்ல நுழைய
வடிந்த சொற்றோடு மனைவி
வாடிக்கொண்டிருந்தால்
எண்ணெய் இல்லாத சமையலை
திண்ணை இல்லாத வீட்டின்
வெளியில் குந்துக்கால் இட்டு
உண்ண முணைந்தோம்...
பாவிப்பருக்கைகள்
பல்கூச்ச மூட்ட
குரல் வலை சிக்கலாய்
பசி முடங்கியது.....
பசித்திருந்த உறவுகளுக்காய்
தன்மானம் தொலைப்பது
நலமென நினைத்து
கடப்போம்.....

எழுதியவர் : (19-May-22, 10:38 pm)
பார்வை : 50

மேலே