தாயுள்ளம்

தாயுள்ளம்


காற்றும் புகாமல் கருவை கனிவுடன்
காண முடியாத அடைந்த இருட்டறையில்
காத்திருந்து கண்மணிக்கு உயிர் கொடுத்து
காற்றை என் சுவாசமாக்கி நான் சுவாசிக்க
காவலிருந்து இன்பமுடன் என்னை ஈன்றெடுத்து
தன்னைத் தானே உருக்கி என்னை வளர்த்து
வாழும் ஓவ்வொரு நாளையும் எனதாக்கி
தன்வேர்வையை சிந்தி என்னை உயர்வாக்கி
நான் உயர உயர தான் உயர்ந்ததாகப் பாவித்து
தனக்கென்று ஒன்றையும் சேர்த்து வைக்காமல்
எனக்காக தன்னையே முழுதாக அர்ப்பணித்த
தன்னலமற்ற அந்த தாயின் இதயம் அதனை
உள்ளதாலும் உணர்வாலும் என்றென்றும் நினைத்து
போற்றிட எவ்வேளையும் நல்வேளை தான் என அறிவோமே

எழுதியவர் : கே என் ராம் (20-May-22, 6:12 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 59

மேலே