மொத்தார்த்

எங்கடா நம்ம நண்பன் சித்தார்த்தை காணம். எங்கடா போனான்? நமக்குச் சொல்லாம எங்கயும் போகமாட்டானே! என்ன ஆச்சுடா?
@@@@@
அவனைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே. அழகான பெண்களைப் பார்த்தாலே வாயிலிருந்து சல்லு வழியும். சென்னைத் தமிழ்ல இதைத்தான் ஜொள்ளுனு சொல்லறாங்க. இன்னிக்கு ஒரு அழகான கல்லூரி மாணவி சாலையில நடந்து வந்திட்டிருந்தது. நம்ம சல்லுவாய் சித்தார்த் அந்தப் பொண்ணைப் பார்த்து விசிலடிச்சு கை தட்டி நிற்கச் சொன்னதோடு இல்லாம ஆபாசமான கைசாடை பண்ணினான். அந்தப் பொண்ணுக்கு கோபம் வந்து செருப்பைக் கழட்டி குறிபார்த்து அவன் மூஞ்சி மேலயே வீசி அடிச்சிருச்சு. அடிபட்ட இடத்திலிருந்து குருதி வழிய ஆரம்பிச்சது.‌ அந்த நேரம் பார்த்து அங்க மக்கள் கூட்டம்கூடி சித்தார்த்தை மொத்த ஆரம்பிச்சாங்க. அப்ப அந்த பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு போக புல்லட்டுல வந்த அவுங்க அண்ணன் நிலைமையைப் புரிஞ்சிட்டு புல்லட்டை சித்து காலுமேல ஏத்தினான். சித்தோட ஒரு காலு படக்குனு ஒடிஞ்சுது. உடனே அந்தப் பொண்ணோட அண்ணன் காவல் நிலையத்துக்குத் தகவலைத் தெரிவிச்சான். அவுங்க அப்பா நம்ம பகுதி காவல் ஆய்வாளராம்.

எழுதியவர் : மலர் (20-May-22, 3:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 36

மேலே