மடிக்காக

ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடன்
எத்தனை நாள்தான் வாழ்வது
கடந்ததை கடைப்பிடித்து
காலங்கள் கரைகின்றன

கண்ணிமையில் சேர்த்து - வைத்த
ஆசைகள் அனைத்தும்
கனக்கிறது நெஞ்சில்
கண்ணிமையும் பாரமானது

கத்திரி வெயிலிலும்
காணாத வெப்பத்தை
அவள் கண்களில்
நான் கண்டேன்

கடைசிவரை கைகொடுப்பாள்
என நினைத்தேன்
காணாத துன்பத்தை
கண்ணெதிரே நிறுத்தி விட்டாள்

கண்களால்வலி தாங்கமுடியாமல்
கானல்நீரில் தீக்குளிப்பது - கண்கள்
கசியும்நீர் சொல்கிறது
அன்பின் ஆழத்தை

என்னவளே
மறுத்துவிட்டாய் வெறுத்துவிட்டாய்
மணிக்கணக்கில் மாரடைப்புவந்து
சாகாம கிடைத்தது
உன் மடிக்காக மட்டும்

எழுதியவர் : (20-May-22, 10:04 pm)
பார்வை : 43

மேலே