என் அன்னை

என்னை சுமந்த தாயே .....
என்னை கருவாக்கி உருவாக்கி
உயிராக்கிய தெய்வம் நீ
கல்லை சிலை வடித்த
மண்ணுலக பிரம்மன் நீ...
கையளவு கல்வியை கையாள
வைத்த சரஸ்வதி நீ....
சிறகில்லாத எனக்கு இறக்கைகள் கொடுத்த தேவதை நீ.....
பகுத்தறிவை எனக்குள் விதைத்த
பாமர வழிகாட்டி நீ....
பார் முழுதும் பாராட்டும் படி
பாசம் கொடுத்தவள் நீ....
சாதனை புரியும் மனதோடு
சரித்திரம் படைத்தவள் நீ.....

எழுதியவர் : சாந்தீஸ்வரி ராஜாங்கம் (24-May-22, 3:12 pm)
Tanglish : en annai
பார்வை : 239

மேலே