புன்னகைக்க மறந்தோம்

நானும் அவரும்
ஒருவரையொருவர்
நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே
வெகு நாட்களாகிவிட்டது
நேற்று அந்த வாய்ப்பு கிட்டியது
ஆனாலும்
ஒருவரையொருவர் பார்த்து
புன்னகைத்துக் கொள்ளவில்லை

அவர் அந்த உறவுக்காரர்
வேறொரு நண்பரிடம் சொல்லியிருக்கிறார்
அவன் என்னைப்பார்த்து
பேசாமலேயே போய்விட்டான் என

ஒருவரையொருவர் பார்த்து
ஒரு சிறு உதட்டசைப்பு செய்யக்கூட
நம்மிடம் நீயா நானா என்ற ஈகோ
இன்னும் நம்மைவிட்டு அகலாமலேயே உள்ளது என்பது
ஒரு பெரும் துர்ரதிர்ஷ்டம்

ஒருவரையொருவர் சந்திக்கும்போது
புன்னகைத்துவிடுவோமே
வைராக்கியம் வாழவைப்பதில்லை
வாழவைப்பதுப்போல் பாவனை செய்யும்..
.

செல்வமுத்து மன்னார்ராஜ்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (26-May-22, 8:55 am)
பார்வை : 236

மேலே