மூன்று முடிச்சு

குடித்துவிட்டு
இரவில் வீட்டுக்கு வரும்
கணவனை தாங்கிப் பிடித்து
உணவளித்து உறங்கவைக்கும்
தர்ம பத்தினியும் உண்டு

குடித்துவிட்டு
ரத்தம் சொட்ட சொட்ட
மனைவியை அடித்துக் காயப்போடும்
கணவனும் உண்டு

என்ன செய்ய
புனிதமான மூன்று முடிச்சுக்குள்
இருவரும் ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து வாழவேண்டியுள்ளதே
நமக்காக வாழ்வதைக் காட்டிலும்
பிறருக்காக வாழ்வதே அதிகம்

கேலி கூத்தாகும்
ஆறுமுடிச்சுயை விட
கண்ணீரும் கம்பளையுமான
மூன்றுமுடிச்சே மரியாதையானது..

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (27-May-22, 9:30 am)
Tanglish : moondru mudichu
பார்வை : 93

மேலே