ஒரு சிவப்பு விளக்கின் புலம்பல்
எத்தனையோ பறவைகள்
வந்தமர்ந்து இளைப்பாறிவிட்டு போகும்
சுகம்தரும் மரமாக நானிருந்தேன்...
ஒரு கனிதரும் மரமாக
தழைக்க வேண்டுமென
இறைவியிடம் மன்றாடிய காலம் அது...
ஒரு மழைக்காலத்தில்
ஒரு பறவையின் எச்சத்தின்
மிச்சத்தில் முளைத்த ஒரு புனிதத்தளிராய் சிறுச்செடியாய் என்னுள் நீ உதித்தாய்...
என் உள்ளத்தின் ஈரம்
என் தனங்களின் வழியே சுரக்கிறது
வா மகளே வா
வந்து உண்டு உன் வயிற்றை நிரப்பிக்கொள்
நிரம்பி வழியட்டும் என் மனசு...
.