எதுகை மோனை யின்றி எழுது வதெல்லாம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 5 / காய்)
(1, 4 சீர்களில் மோனை)
எதுகை மோனை யின்றி
..எழுது வதெல்லாம் இனிமையில்லை
புதிதாய் எதுகை மோனை
..பொதிந்து வைத்தால் இன்பமன்றோ?
எதுவந் தபோதும் என்றும்
..இனிமை யாக்குங் கவிசெய்யப்
பொதிந்த கருத்தும் புகுத்திப்
..புதுமைக் கவிதை செய்திடுவீர்!
- வ.க.கன்னியப்பன்