காதலியே கதி
காதலியே கதி....
உன்னில் கலந்து உன்னில் நிறைந்து
உன்னில் கரைந்தேன் உறவே !
என்னில் எழுந்து இதயம் நுழைந்து
இன்பம் மகிழ்ந்தேன் உயிரே !
நதிமீறிப் பாய்கின்ற வெள்ளம் !
நமக்கான பயிர்சாய்த்துத் துள்ளும்!
விதிமீறி செய்கின்ற வேளை
சதியாவும் சாய்க்கின்ற வேலை !
புதிதான உலகொன்று நமக்கே
புதிதான சுகம்யாவும் இனியே !
சுதிசேரும் கீதங்கள் இனிதே !
கதியாக என்றென்றும் நீயே !
-யாதுமறியான்.