அவள் பேசிய மௌன மொழி

என்மீது கொண்ட ஊடலால் அவள்
என்னோடு பேசாது இருப்பினும் அவள்
விழிகள் என்னோடு பேசுவதை நான்
கண்டுகொண்டேன் அதைக்கண்டு உணர்ந்து
அவள் தண்மலர் விழிகளை மூடிக்கொண்டாலும்
அவள் மூடிய அதரம் பேசியதே
இம்மௌன மொழிகளே போதுமே என்னை
வாழவைக்கும் காதல் மொழியல்லவோ இவை
என்று அவளே என்னிடம் சொல்லி விளக்குவதுபோல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jun-22, 8:28 pm)
பார்வை : 215

மேலே