உன் காது மடலில் ஒரு முத்தம் 555
***உன் காது மடலில் ஒரு முத்தம் 555 ***
ப்ரியமானவளே...
மின்விசிறியின் சப்தத்தில்
நிசப்தமான இரவில்...
நான் கண்ணுறங்க
நினைத்தால்...
உன் அழகிய நினைவுகள்
இமைகள் மூட விடுவதில்லை...
நீ இன்றுவரை எனக்காக
கவிதைகள் எழுதியதில்லை...
தினம் தினம் உன் கண்கள்
என்னை கண்டால் எழுதும்...
உன் மைவிழி
பார்வையில் கவிதை எழுதி...
உன் நாணல் இடையில்
என்னை வளைத்து போட்டு...
உன் மல்லிகை பின்னளில்
என்னையும் சேர்த்து...
காதலோடு முடிந்து
கொண்டாயே கள்ளி...
தென்றல் தீண்டும்
உன் காது மடலில்...
நான் முத்தம்
வைக்க வேண்டும்...
கொய்யத கொங்கைகளில் நான்
முகம் வைத்து உறங்க வேண்டும்...
நீ கொடுக்கும்
முத்தத்திற்காக...
தினம் தினம் உன்னோடு
சண்டை போடுகிறேனடி...
நித்தம் நீளும் உன் நினைவுகள்
எனக்கு சுகம் தானடி...
நாளை எப்போது எங்கு
சந்திக்கலாம் என்று.....
***முதல்பூ.பெ.மணி.....***