உலகம்
உலகம்.
உலகம் என்ன
சொல்லுது?
தான் உருண்டை
என்று சொல்லுது,
தன் மேனி எல்லாம்
மேடும் பள்ளமும்
என்று கவலை
கொள்ளுது!
வேறு என்ன
சொல்லுது?
சுற்றி சுற்றி
தலை சுற்றுது,
அடி வயிறு
நெருப்பு போல்
எரியுது என்று
சொல்லுது.
வேறு என்ன
சொல்லுது?
சுற்றுவதை
நிறுத்தி விட்டால்!
சூரியன் நம்மை
முழுங்கி விடும்
என்று சொல்லுது.
பாவம் உலகம்!
எங்களுக்காக
சுற்றி சுற்றி,
அதற்கு தலை
சுற்றுது.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.