காதல் தோல்வி கவிதை

💔💔💔💔💔💔💔💔💔💔💔

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💔💔💔💔💔💔💔💔💔💔💔

பெண்ணே !
என் இதயத்தை பிழிந்தால்
உதிரம் வராது....
உன்
நினைவுகள் தான் வரும்.....

என் கண்களைக் கசக்கினால்
கண்ணீர் வராது
உன்னுடையக்
காட்சிகள்தான் வரும்......

என்னுடைய
இதய ஒலியை கேட்டால்
லப் டப் ஒலி வராது.....
உன்னுடைய பெயர்
உச்சரிப்பு ஒலி தான் வரும்....

என் குறிப்பேடுகளைக்
ஆராய்ந்தால்
குறிப்புக்கள் இருக்காது.... !
உனக்கும்
எனக்கும் பிறந்த
கவிதைகள் தான் இருக்கும்...!

என் இரத்தத்தை
பரிசோதனைச் செய்தால்
என்ன பிரிவு ? என்று தெரியாது
உன் மேல்
நான் கொண்ட
பிரியம் தான் தெரியும்.....!

என் வாழ்க்கையைப்
பின்னோக்கிப் பார்த்தால்
நான் எனக்காக
வாழ்ந்ததை விட
உனக்காக வாழ்ந்ததே
அதிகமாக இருக்கும்.....!!!

💔💔💔💔💔💔💔💔💔💔💔

என் பேனாவைப்
பார்ப்பவர்கள் எல்லாம்
உன் பேனாவில்
"மை கசிகிறது" என்று
சொல்கிறார்கள்.....
அடி பெண்ணே .....!
உன் பிரிவால்
நான் எழுதும்
சோகக் கவிதைகளை
கண்டு தான்
என் பேனாவும்
"கண்ணீர் வடிக்கிறது" என்று அவர்களுக்கு
எப்படி தெரியும்.?

*கவிதை ரசிகன் குமரேசன்*

💔💔💔💔💔💔💔💔💔💔💔

எழுதியவர் : கவிதை ரசிகன் (7-Jul-22, 9:48 pm)
பார்வை : 78

மேலே