மலர்ரோஜா போல் அவளும் நடந்தாள்

மலர்தொட்டு தென்றல் தோட்டத்தில் மெல்ல - நடந்தாள்
பலர்பார்க்கும் வெண்நிலாவும் வான்வெளியில் மெல்ல - நடந்தாள்
மலர்ரோஜா போல்மேனி எழிலில் அவளும் - நடந்தாள்

யாப்பார்வலர்களுக்கு சில குறிப்புகள் :--

யாப்பில் இது வெளிவிருத்தம் --எல்லா அடியிலும் ஒரே தனிச் சொல்
அமையவேண்டும் என்பது இதன் சிறப்பு விதி இங்கே நடந்தாள்
மூன்று அல்லது நான்கு நெடில் அடிகளால் அமைய வேண்டும் ---இங்கே மூன்றால் அமைக்கப் பெற்றுள்ளது
நெடிலடி ஐந்து சீர்களால் அமையும்
5 6 7 சீர்களால் அமைக்கப்பெறுவது கழிநெடிலடி எனப்படும்
மேலும் தேர்ந்த யாப்பாசிரியர்கள் யாப்பு நூல் வழி தெரிந்து கொள்ளவும் .

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-22, 11:56 am)
பார்வை : 75

மேலே