மோனை எதுகையில் யானைக்கு ஒரு பா தரவா
கோவில் யானைக்கு
சிலர் தேங்காய் கொடுத்தார்கள்
சிலர் பழம் கொடுத்தார்கள்
சிலர் தும்பிக்கையில் காசு தந்தார்கள்
நான் பாகனிடம்
நான் கவிஞன்
மோனை எதுகையுடன்
யானைக்குப் பா தரவா
என்று கேட்டேன்
சரி கொடு என்று சொல்லுவான்
என்று நினைத்தேன்
ஆனால் ...
நானோ யானைப் பா கன்
யானைக்கு இன்னொரு யானைப் பா க்காரன்
தேவையில்லை என்று சொல்லிவிட்டான்
----குமரேசரின் "கோவில் யானையின் குறும்பு "
தூண்டிய கவிதை