புவியை ஈர்க்கும் உன் புன்னகைக்கு

சிவந்த உன் செவ்விதழுக்கும்
குழிந்திடும் கன்னத்திற்கும்
புவியை ஈர்க்கும் உன் புன்னகைக்கும்
கவிந்திடும் விழிகள் காட்டும் அந்தியின் அழகிற்கும்
கவிதைகள் ஒன்றா இரண்டா எத்தனை எழுதலாம் !

சிவந்த செவ்வி தழுக்கும் கன்னக் குழிவிற்கும்
புவியை ஈர்த்திடும் எழில்மிகு புன்னகை அழகிற்கும்
கவிந்திடும் விழிகள் காட்டும் அந்தியின் அழகிற்கும்
கவிதைகள் ஒன்றா இரண்டா எத்தனை எழுதலாம்

சிவந்தஉன் செவ்விதழ் கன்னக் குழிவு
புவிதனை ஈர்த்திடும் புன்னகை யிற்கும்
கவிந்திடும் உன்விழியின் அந்தியழ கிற்கும்
கவிதை எழுதலாம் நூறு

--கவிதை வடிவங்கள் முறையே புதுக்கவிதை கலித்துறை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jul-22, 11:08 am)
பார்வை : 57

மேலே