ஏக்கம்
ஏக்கம்.
உன்னை நான் நினைக்கையிலே,
இறைவா!
உலகை நான்
மறந்திடுவேன்,
என் மனம் அமைதி
அடைந்து விடும்.
என்னை நான்
நினைக்கையிலே
இறைவா!
ஏன் என் மனதில்
ஓர் குழப்பம்?
கடற்கரைக்கு
சென்றிடுவேன்,
காட்டுக்குள்
ஓடிடுவேன்,
இறைவா!
காண்பேன் அங்கு
உன் பேரழகை,
மீண்டும் என் மனம்
அமைதி
அடைந்து விடும்.
பறவைக் கூட்டத்தை
பார்க்கையிலே
இறைவா!
ஏன் என் மனதில்
ஓர் ஏக்கம்?
அவைகள் எல்லாம்
உன் உறவினரோ!
உன்னை நான்
நினைத்திடுவேன்
இறைவா!
என் மன ஏக்கம்
நீங்கி விடும்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.