என் சந்தோசத்தை மீட்டுக்கொடு 555
***என் சந்தோசத்தை மீட்டுக்கொடு 555 ***
என்னுயிரே...
தேடி பார்க்கிறேன் உன்னிடம்
தொலைந்த என்னை...
எப்படி மீட்டு எடுப்பது
தெரியவில்லை இன்றுவரை...
நீ என்னை
காதலித்ததைவிட...
அதிகமாகத்தான் நான்
உன்னை காதலித்தேன்...
ஏன் இந்த
பிரிவு நமக்குள்...
நான் உன்னை பார்த்தே
பல மாதங்கள் ஆகிவிட்டது...
நீ புரிந்துகொள்ளாத என்
அன்பு வீணாகிப்போகுது...
உன் இதயத்திலும் மடியிலும்
இடம் கொடுத்த நீ...
உருகும் என் இதயத்திற்கு
ஆறுதல் சொல்ல வராதது ஏனோ...
நீ பிரிந்து சென்றாலும் நான்
உன் இதயத்தை சுமக்கிறேன்...
உன் நினைவுகளில் நான் சிறு
அணுவாக வந்து செல்கிறேனோ...
என் நினைவினில் நீ
இதயத்தின் வலி...
என்னை
தொலைத்தது நீதான்...
என் இதயம் நொடிக்கு நொடி
சொல்வது ஐ மிஸ் யூ என்றுதான்...
நான் பறிகொடுத்த
என் சந்தோசத்தை...
நீ எப்போது மீட்டு
தருவாய் நேரில் வந்து.....
***முதல்பூ .பெ.மணி.....***