கார் கூந்தல் அழகு
நேரிசை வெண்பா
மொட்டைத் தலையாளாம் முண்டைச்சி வைப்பளோ
செட்டாய் அழகிய செண்பகப்பூ -- கட்டோடு
தொங்கு குழலில் துவளவிடு காட்டுமல்லி
அங்கமெலாம் அள்ளும் அழகு
குறள் வெண்பா
உரைநடை மொட்டை ஒருநாளும் ஆகா
கவிதை குழலாகும் கார்
உரைநடை என்னும் மொட்டைத்தலை கவிதையாகாது
கவிதை என்பது பூச்சூடிய கார்குழல் ஆகும்
ஆக கூந்தல் வாரிப் பின்னி பூச்சூடுவதே கவிதையாகும்
........