நீயின்றி நானில்லை

நீங்காத நிழல்
ஒன்று கண்டேன்...

நிமிடமும் விலகாமல்
பின்தொடர கண்டேன்...

அதுநீயென அறிந்து
மனம் கனிந்தேன்...

நீயின்றி நானில்லை
என உணர்ந்தேன்...

என்தன் ஹிருதயம்
நீயென மகிழ்ந்தேன்...

மனமெங்கும் ஆனந்தம்
திளைப்பதை ரசித்தேன்...

சிறகற்ற பறவையாக
உயரம் பறந்தேன்...

உச்சி வானில்
உலகம் மறந்தேன்...

இதயம் இறகாக
மகிழ்வில் திளைத்தேன்...

உடன் உனைக்காண
மனம் ஏங்கினேன்...

கண்ட நொடியில்
உனை அணைத்தேன்...

நீங்காத நிழல்
ஒன்று கண்டேன்...

நீயின்றி நானில்லை
என உணர்ந்தேன்...

எழுதியவர் : கவி பாரதீ (8-Aug-22, 11:03 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : neerindri naanillai
பார்வை : 876

மேலே