அத்தைப் பெண்ணே

மெத்தென்ற உன்கரம் பிடித்து
காலம் முழுதும் நடக்க வேண்டுமடி
அத்தைப் பெண்ணே...
சொத்து சுகம் எதுவும் வேண்டாம்
உன்னோடு சேர்ந்து வாழும்
கெத்து ஒன்றே போதுமடி
அத்தைப் பெண்ணே....
பத்துமாதம் சுமந்து பெற்ற
அன்னை சாதிக்காததை
சாதித்து விட்டாயடி
என் கண்ணே...
பாதி வாழ்வை அவள் சுமந்தாள்
மீதி வாழ்வை பங்கிட வந்தாயே
பங்கிட்டு என்
மொத்த வாழ்வையும்
வளம்பெற செய்த உன்
மெத்தென்ற கரம் பிடித்து
காலம் முழுதும் நடக்க வேண்டுமடி
அத்தைப் பெண்ணே ...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (10-Aug-22, 8:48 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 63

மேலே