பிரியங்கள்

ஞாபகத்தின்
காலடியில்
தஞ்சம் புகும்
இன்றைய
மீள்நினைவுகளை
பிரியங்களால்
ஒத்தியெடுத்து
படுக்கையில்
கிடத்துகிறேன்
ஊர்ந்து கொண்டிருக்கும்
அன்பின் கணங்களை
அனுபவித்தபடி
பயணிக்கிற
திசைகளிலெல்லாம்
தடம் தரிசித்து
நீங்கிக்
கொண்டிருக்கிறது நான்
பொய்த்துப்போன
பெருமழைக்காலத்தின்
வெக்கை நினைவுகளில்
மிச்சமிருந்த பழைய
பிரியங்கள்
நனைத்துக்
கொண்டிருக்கிறது
வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த
பிரியங்களை
திசைக்கொன்றாய்
வீசிச்சுழற்றி
கடத்திக்
கொண்டிருக்கிறது காற்று.

எழுதியவர் : (7-Aug-10, 4:41 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 388

மேலே