அருவம்

அன்றொரு நாள்
பஞ்சபூதங்கள் அடங்கிய
ஒர் உருவமது...¡

அழகைக்கண்டு வியந்து,
அறிவிற்ச் சிறந்து
உறவுகளுடன் மகிழ்ந்து

துன்பத்தில் துவண்டு
அழகாய் ஆடித்திரிந்த
ஓருயிர் ஓவியமது...¡

தேகம் இழந்து
இனிது தீதுயாவும்
இழந்து, இவ்வையகத்தின்

தொடர்பு யாவுமிழந்து
உருத் தெறியாது
அழிந்த சித்திரமது...¡

இவற்றின் இருப்பை
நிச்சயிக்க அரங்கேறும்
ஆராய்ச்சிகள் அநேகம்...¡

கண்களால் கண்டறியாத
இறையை உளமார
நம்பிடுவோர் அநேகம்

நம்மில் உள்ளனர்,
காண இயலா
இறையை நம்புகையில்

காண இயலாத
அருவத்தை மட்டுமேன்
நம்ப இயலாது...¡

மனதால் தர்கித்து
அதையே நம்பிடும்
சராசரி நான்...¡

எழுதியவர் : கவிபாரதீ (28-Aug-22, 1:13 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 65

மேலே