மலரும் உன்புன்னகையில்

மதிநிறை முகஎழிலில் மலரும் உன்புன்னகையில்
புதிய முத்துக்களின் ஓசையோ
அல்லது
அதிசய ராகம் ஒன்றின் ஆலாபனையோ
அல்லது
நதியலைகளின் சலசலப்போ
எதுவென்று நீயே சொல்வாய் !
-------------------------------------------------------------------------------------------------
வேறு வடிவில் யாப்பு விழைவோருக்கு

புதிய முத்துக்களின் இனிய ஓசையோ
அதிசய ராகம் ஒன்றின் ஆலாபனையோ
நதியலையின் சலசலப்போ எதுவென்று சொல்வாய்
மதிநிறை முகஎழிலில் மலரும் புன்னகையில்

புதியமுத் துக்களின் மெல்லியஓ சையோ
அதிசய ராகத்தின் ஆலா பனையோ
நதியலை செய்யும் சலசலப்போ யாது
மதிஎழிலே புன்னகை யில் ?

யாப்படையாளம் முறையே கலிவிருத்தம்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-22, 7:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 171

மேலே