வர்ணிப்பு..//

சின்னதொரு முகம்
என்று முடிக்காமல்
அவளை முழுமையாக
வர்ணிக்க போகிறேன்..//

குறுகுறு பார்வைக்குள்
நுழைந்து பூமி ஆளும்
ஆதவனை போல் நானும்
அவளை ஆளவேண்டும்..//

குறுகிய நெற்றியும்
கூரான புருவமும்
பார்வையால் குத்துதடி
நெஞ்சை..//

மூக்கின் மேல் வரும்
கோபம் கூட முறைக்க
சொல்லுதடி வாய்
மட்டும் சும்மா இருந்து
விடுமா என்ன..//

காதின் ஓரம்
தொங்கும் கம்மல் கூட
சத்தம் எழுப்புதடி நான்
அவளை கவனிக்கிறேன்
என்று ஊரை கூட்ட..//

தென்றல் வீசும் காற்று
கூட கைதியானது
அவள் கூந்தல் ஓரம்
நான் மட்டும் விடுபட்டு
விடுவேனா என்ன..//

இனி நான் கழுத்துக்கு
கீழே எங்கே போவது
முகமே மின்சாரம் போல
என்னை கொல்லுதடி..//

எழுதியவர் : (1-Sep-22, 4:15 pm)
பார்வை : 44

மேலே