மலர்களே விரைந்து மலர்ந்து விடுங்கள் அவள் வருகிறாள்

மலர்களே மாலை மலர்களே
விரைந்து மலர்ந்து விடுங்கள்
புன்னகையில் மௌனமாய்
அவள் வருகிறாள்
நாணத்தில் முழுதும் மலராமல்
மூடிக்கொள்ளப் போகிறீர்கள்
மொட்டுக்களாகவே முடியப் போகிறது
உங்கள் மாலைப் பொழுது !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-22, 10:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே