மாஞ்சோலையில் நீவரின் வந்திடும் காதல்

மாமுன் நிரைநிற்க நல்வெண்பா தந்திடும்
மாஞ்சோலை யில்நீ வரின்வந் திடும்காதல்
மாமரத் துக்குயில் பாடும் மகிழ்ச்சிதனில்
மானேமா லைவாரா யோ

யாப்புக் குறிப்பு :
மா முன் நிரை வரவேண்டும் என்பது வெண்பா விதி
விரிவை தேர்ந்த யாப்பாசிரியரிடம் யாப்பு நூலில் தெரிந்து கொள்ளவும்
பல விகற்ப இன்னிசை வெண்பா
மா மா மா மா ----அடிமோனை இவ்வெண்பாவின் சிறப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (15-Sep-22, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே