முப்பொழுதின் பெயரும் காதல்தான் என்றாள்

பொழுது போகவில்லை என்று
வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்
அந்தி கவிந்து கொண்டிருந்தது
அழகிய நிலா மஞ்சளில் சிரித்துக் கொண்டிருந்தது
அந்திப் பொழுது கவிதையா அல்லது ஓவியமா
என்று யோசித்தேன்
அவளும் வந்தாள்
அதை அவளிடமே கேட்டேன்
அந்திப் பொழுதை எழுதினால் கவிதை
வரைந்தால் ஓவியம்
என்னுடன் கைகோர்த்து நீ நடந்தால்
அந்தியென்ன முப்பொழுதின் பெயரும் காதல்தான் என்றாள்
மெல்லிய புன்னகையில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-22, 10:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே