வாடகை வீடு

அகவற்பா

தொல்லை யில்லா தோர்நிரந் தரவீடு
இல்லை என்ற தொல்லை என்றுமே
எனக்கது நிரந்தரம் வினையாய் யானே
பெற்ற சாபமும் தொடருது தொடருது
நேரே கேட்டேன் நொந்து சொன்னது
இறையு முனக்கு என்றில்லை அதுதான்
அனைத்திற் கும்விதி என்றான் பாரு
இறைவா
தவறத் தண்டனை பிறகுண்டு சரியே
ஆனால் தண்டனை மறுசென்மம் சரியோ
ஆத்மா கொள்ளும் தண்டனை அதற்கும்
அறியா வண்ணம் தண்டனை கொடுத்திட
சரியா என்றவர் குரலு கேட்கலையோ
இன்ன குற்றம் இன்ன தண்டனை
அறிந்தால் நன்று என்று வைக்கவேன்
மறந்தாய்
ஆத்மாவும் அறியா வண்ணம் தண்டனை
ஆத்மா விற்கு தந்து ஆவதென்ன
பிறவிப் பெருங்கடலை நிரந்தர
மாக ஆட்டு விக்கவாட கைவீடோ

.......

எழுதியவர் : பழனி ராஜன் (3-Oct-22, 8:38 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : vaadagai veedu
பார்வை : 50

மேலே